Thursday, September 09, 2010

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் தீர்வைப் பெற்றுத் தராது - ஜே.வி.பி தலைவருக்கு திடீர் ஞானோதயம்

Addthis

somavansa.jpg - 14.91 Kbஇலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் தீர்வைப் பெற்றுக் கொடுக்காது என்றும் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைப்பதிலேயே அது குறியாய் இருக்கிறது என்றும் ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் எதிர்வரும் பொதுத் தேர்தல்கள் தொடர்பாகவும் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் உட்பட உள்நாட்டில் காணப்பட்ட ஏனைய ஜனநாயகப் பிரச்சினைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கும், சர்வதேசத்துக்கும் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை அரசாங்கம் மீறியுள்ளது. இதனால் பாரியளவிலான சர்வதேசத்தின் உதவிகளை இழந்துள்ளதுடன் அநாவசியமான பகையையும் தலையீடுகளையும் தேடிக் கொண்டுள்ளது எனவும் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையென்றும் பயங்கரவாதப் பிரச்சினையே இருக்கின்றது என்றும் தொடர்ந்து கூறி வந்த சோமவன்ச அமரசிங்கவிற்கு தேர்தல் காரணமாகவே இந்த ஞானம் பிறந்துள்ளதாக தமிழ் மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security
Please input the anti-spam code that you can read in the image.

விளம்பரம்

மாவீரர் துயிலுமில்லம்

Media Links

   Tamil Eelam News
   Tamil Star Entertainment
   Tamil Star Radio

   
   

Tamil Business Directory

Upcoming Events

No events

Latest News

Login Form